நெஞ்சு பொறுக்குதில்லையே !!
வியாழன், 8 ஜூன், 2017
இவன் போட்ட கணக்கு ஒன்று !! அவன் போட்ட கணக்கு ஒன்று !!( இரண்டுமே தவறானது)
அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
பொங்கிவரும் பாலென !!
ஒரே நாளில் கிட்டத்தட்ட 107 நட்பு நாடல்
மலரச் செய்திட்ட என் தலைவன் !!
அதுதான் உண்மை. தமிழகத்தில் இந்த ஜென்மம்
மணல் மார்பியா கும்பலின் தலைவன்
ஆனால் அவனால் இந்தக் கேடி மோடிக்கு பயன் கிடைக்க வில்லை. எனவே எடப்பாடியை எடுபிடி ஆக்க எண்ணி
அது வரை அவரிடம் (TTV)
இத்தனை சுகங்களையும் தினகரின் பணத்தில் ஆண்டு அனுபவித்த இந்த சுயநலவெறி
செய்நன்றி மறந்து கைது நடவடிக்கைகளுக்கு
முடிவு :- போட்டான் தாடியின் தலையிலே கல்லு !!. அதுதான்
பிளந்தது எடப்பாடி என்ற எடுபிடியின்
இப்போது வாலறுந்த பல்லியாக,
இந்த மூவரும் மூச்சடைத்துநிற்கும்வண்ணமாக,
விதியின் காரணமா ? அல்லது விதியின் காரணத்தை சொல்லி வயிறு வளர்த்து !!மக்களை சும்பர்களாக மாற்றி லஞ்சப்பணத்தை, (வாக்குகளாக மாற்றிட )வாரி இறைத்து, வாக்காளப் பெருமக்களை குடிக்கச்சொல்லி, குவாட்டர் பாட்டில்களும், பிரியாணி பொட்டலங்களும் தந்து, அவர்களது சிந்திக்கும் திறனை அழித்து, அவர்களது சீரை நாசமாக்கி,
எதிர்வரும் தமிழக தேர்தல், அது எப்போது வந்தாலும் ஆளப்போகும் கட்சி திமுக தான். முதல்வர் தலைவர் கலைஞர் தான். தேர்தல்
எனவே தேர்தல் நடந்தாலும் !! அதுபோல தேர்தல்நடக்காமல் போனாலும், சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியை கவிழ்த்தே ஆவார்கள். திமுகவை,வெளியில் இருந்து ஆதரிப்பார்கள்.
திங்கள், 26 டிசம்பர், 2016
புருசன் அடிச்சது தப்பு இல்லையாம் !! ஆனா நாத்தனார் சிரிச்சதுல கோவம் புட்டுக்குச்சாம் !!
புருசன்அடிச்சது தப்பு இல்லையாம் !!
ஆனா நாத்தனார் சிரிச்சதுல கோவம் புட்டுக்குச்சாம் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
மறைந்த எனது அன்பிற்குரிய தந்தை அடிக்கடி
உபயோகப்படுத்தி வந்த ஒரு பழமொழியை
நான் இங்கே எனது கட்டுரைக்குத் தலைப்பாக
தந்ததற்கு காரணம் என்னவென்றால், நேற்று
மாலை ஆளும் அஇஅதிமுக கட்சிக்கு சமீபத்தில்
விலைபோனவரும், வாசன் கட்சியில் இருந்து
கொண்டே மறைந்த அம்மையார் ஜெக்கு காவடி
தூக்கியவரும் கட்சி மாறிவந்து இணைந்ததால்
ஜெ போட்ட பிச்சைப்பதவியானமாநிலங்களவை
உறுப்பினராக ஆனவரும் முன்னாள் மூத்த
காங்கிரஸ்காரருமான S.R.பாலசுப்பிரமணியம்
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சமீபத்தில் வருமானவரித்துறை, தலைமைச்செயலாளர் திரு. ராம் மோகன ராவ் மற்றும் அவரது மகன்,நண்பர்கள் ஆகியோர்கள் வீட்டில், நடத்திய சி.பி.ஐ. சோதனைகளைப் பற்றிய தமது கருத்துக்களை ( அதாவது திருமதி சசிகலா கருத்து) எடுத்து சொன்ன விதத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு எனது தந்தை சொன்ன அந்த பழமொழி
நினைவின்பால் எழுந்ததை நேயர்களிடம் நான்
இத்தருணத்தில் பகிர்ந்துகொள்வதில் மிகவும்
மன மகிழ்ச்சி அடைகிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அதாவது மத்திய அரசின் வருமானவரித்துறை
இங்கே தலைமைச் செயலாளரின் வீடு மற்றும்
அவரது மகன் வீடு, அலுவலகம், மற்றும் இவரது
நண்பர்வழக்கறிஞர் அமலநாதன்ஆகியோரின்
இடங்களில் சோதனை நடத்த நேரடி அனுமதி கிடையாதாம். மாநில அரசாங்கத்தின் ஒப்புதலை பெற்று அதன் பிறகுதான் சோதனை நடத்த வேண்டுமாம்.
அப்படி சோதனை நடத்திய போது யாராவது அரசு ஊழியர்கள் ஏதாவது தவறு செய்து ஊழல் மூலம் சொத்துசேர்த்திருந்தால்,அதுபற்றி மாநில அரசுக்கு தகவல்மட்டும்தான் தர முடியுமாம், தர வேண்டுமாம். மற்றபடி வருமானவரித்துறை மற்றும் CBI இலாக்காவினால் அவர்கள்மீது அதாவது லஞ்ச லாவண்யம் செய்து சொத்துக்குவிப்பு செய்திருந்த நபர்கள் மீது எந்தவித நேரடி நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசின் வருமானவரித்துறை, மற்றும் C.B.I. போன்ற மைப்புகளுக்கு இல்லையாம் என்ற புதிய தத்துவத்தை கட்சி விட்டுக் கட்சி மாறிய கபோதி பாலசுப்பிரமணியம் தனது திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.
அந்தத் தகவலை ஆராய்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி மாநில அரசாங்கம்தான் முடிவு செய்யுமாம். அது மட்டுமல்ல, பாதுகாப்பு பணியில், துணை ராணுவத்தை ஈடுபடுத்தியது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாம். இவர் அந்த
சசிகலா சொன்ன உத்திரவு போட்ட கருத்துக்களை திரு பாலசுப்பிரமணியம் அப்படியே வாந்தி எடுத்து உள்ளது கேட்டு, அழுவதா இல்லை சிரிப்பதா என்று
எனக்குத்தெரியவில்லை.
இந்த கட்சிவிட்டுக் கட்சி தாவிய கபோதி, கேவலம் ஒரு MPபதவி, அதுவும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி
ஜெ போட்ட பிச்சை, என்பதைத்தவிர இவருக்கு என்ன தகுதி இருக்கிறது ? இதுபோன்ற விஷயங்களில் இவர் மூக்கை நுழைத்து பேசுவதற்கு. இல்ல தெரியாமல்தான்
கேட்கிறேன், இங்கே கூட்டாட்சியா நடந்தது கடந்த 5.1/2 ஆண்டுகளுக்கும் மேலாக ? இங்கே ஜோராக நடந்தது, அரங்கேறியது,ஆட்சி செய்தது இவை அத்தனையும் ஒரு கொள்ளைக்காரியின்
ஆட்சி அல்லவோ நடந்தேறியது.
ஒரு திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனிடம் அனுமதி கேட்ட கதையால்ல இருக்குது இந்த கட்சிவிட்டுக்கட்சி மாறிய கபோதி சொல்றது ? அட என்ன நான் சொல்றது சரிதானுங்களே.
உங்க கட்டுப்பாட்டில் உள்ளது என்ன காவல்துறையா ?அது நீங்க சொல்ற கட்டளைகளை சிரமேற்கொண்டு
பணிபுரியும் ஏவல்துறையாக மாறி ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது உலகறிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, வருமானவரித்துறையினர் தங்களது
உயிருக்கும், உடமைகளுக்கும் எப்படி கபோதி பாலு உங்க காவல்துறையை அவர்கள் நம்பி தங்களது பணியில் ஈடுபடமுடியும்? அதனால்தான் அவர்கள் துணை ராணுவ பாதுகாப்பில், இந்த சோதனைகளில்
ஈடுபட்டார்கள்.
இவர்கள் கொள்ளை அடித்தது தப்பு இல்லை. ஆனால் அந்த தவறு செய்தவர்களை சோதனை செய்ததும் அவர்களிடம் சொத்து மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தது தவறாம்.
என்னடா இது லோகத்துலே நியாயம் எல்லாமே
செத்துப்போயிடுத்தாஎல்லாமேஅராஜகம்தானா?
இதை கேட்டபிறகு எனது மனதிற்குள் எழுந்த ஒரு அதிர்வலைதான் என்னை எனது தந்தை சொன்ன பழைய பழமொழியைத் தலைப்பாகக் கொண்டு இந்தக்கட்டுரையை எழுதிடத் தூண்டியது என்று சொல்லி கட்டுரையை நான் இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. TR. பாலு.
செவ்வாய், 22 நவம்பர், 2016
புயலுக்குப் பிறகு அமைதி !! அநியாய வெற்றிக்குப் பிறகு ?
புயலுக்குப் பிறகு அமைதி !!
அநியாய வெற்றிக்குப் பிறகு ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த
வணக்கம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியில்,
நாம் பொதுவாக பார்த்தோமேயானால்,இங்கே
நடைபெறுகின்ற நிகழ்வுகள் ஒவ்வொன்றும்
ஒன்றுக்குமற்றொன்றுஎதிர்மறைவிளைவுகளைசந்திப்பதாக மட்டுமே இதுவரை இயற்கையாக, அழகாக, அமைந்திருக்கிறது.
எப்படி என்று கேட்டால், கடும் கும்மிருட்டு
நிறைந்த இரவு அதனை அடுத்து நல்ல வெளிச்சம் தருகின்ற உதயசூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியெங்கும் பிரகாசிக்கத் தொடங்குவதால் அந்த கும்மிருட்டு எங்கே என்று தேடினாலும் அது காணாமல் போய்விடுகிறது.
அதேபோலத்தான் காலங்களையும் இறைவன்
கணக்காகஅளந்துஇங்கேபடைத்துள்ளான்.
எப்படி என்றால், மழைக்காலம், அதனை அடுத்து
நம்மை வாட்டி வதைக்கும் குளிர்காலம்,அதனை
அடுத்து இந்தக்குளிருக்கு கடும் எதிரியான வெப்பக் காலம் அதனை அடுத்து இதமான தென்றல் வீசிடும் வசந்தகாலம்...இதுபோலவே ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர்மறையான காலங்களாகவே இறைவன் இந்த பூமியில் நிகழ்வுகளாக படைத்துள்ளான். இது
எதற்காக ? என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்த்தால்,நமக்கு வரும் விடை, இதுதான் :-
எதுவும் இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் இல்லை.
காலம் மாறுதலுக்கு உரியது. அதேபோல
மனிதன் நிலையம் மாறுதலுக்கு உட்பட்டது.
நேற்று வரையில் பணக்காரன், ஆனால் இன்றோ பரம ஏழை. ( இதை பல நிகழ்வுகளில் பூகம்பம்நடைபெற்ற இடங்களில் காணலாம்) அதே போல நேற்று வரை ஏழை, பிச்சைக்காரன், ஆனால் இன்றோ திடீர் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவனே பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடுகிறான். ( இதையும் பல லாட்டரி குலுக்கல்கள் இந்த பூமியில் நமக்கு
நடந்தவைகள் நினைவு படுத்தியுள்ளது) இதே போல சரித்திரத்தில் நடந்த ஒரு நிகழ்வினை உங்களிடம் சொல்லி இந்தக்கட்டுரையை நிறைவு செய்திட நான் நினைக்கின்றேன். (இன்ஷா அல்லாஹ்- இறைவன் நாடினால்)
அது ஒரு மொழியின் பெயரால் அமைந்த மாநிலம். அந்த மாநிலம்அமைந்த நாடு, சுதந்திரம் அடைந்த நாள் முதலாக, சுமார் 20 ஆண்டுகள் வரையில் தேசிய கட்சியால் ஆளப்பட்டு வந்தது. அதன் பிறகு ஏற்பட்ட
மக்கள் விழிப்புணர்வால், மாநிலக்கட்சியின் ஆட்சி அங்கே மலர்ந்தது. அது ஒரு சுயமரியாதை உணர்வு உள்ள ஒரு இயக்கம். ஒரு பேரறிஞரின் தலைமையில் இரண்டு ஆண்டுகள் நிர்வாகம் மிகவும் செவ்வனே நடந்தது. திடீரென அவர் மறைவுக்குப் பிறகு அவரது வழியில் கிஞ்சித்தும் அடி பிறளாது நடக்கும் ஒருநல்ல நிர்வாகத்திறன் பெற்ற ஒருவர், நல்ல பல கலைகள் கற்றறிந்த கலைஞர், மிகச்சிறந்த நிர்வாகி, எதையும்
ஆராய்ந்து, அறிந்து செயல்படுத்துவதில் சாணக்கியர், அவரது நிர்வாகத்தில் அந்த மாநிலம் நல்ல பற்பல திட்டங்களால், மிக மிக முன்னேறியது. ஆனால் அவரது துரதிர்ஷ்டமோ அல்லது விதியின் விளையாட்டோ அவரது கட்சியில், அவரது கட்சியை வைத்து, தனது
வாழ்வை வளப்படுத்திக்கொண்ட நடிகர் ஒருவர்
அந்தக்கட்சியை உடைத்து, தனியாக கட்சி ஒன்று
ஆரம்பித்து, ஏறத்தாள 13 ஆண்டுகள், அம்மாநிலத்தை ஆண்டு, முன்னேற்றத் திட்டங்கள் என்று எதையுமே செய்யாமல், மறைந்து போனார். அவருக்குப்பிறகு
அவரது கட்சியின் கொள்கை பரப்பு பணியை ஏற்று நடத்திவந்த அவரது " ஆசைக்கும்-அன்புக்கும் " உரிய ஒரு நடிகை அந்தக் கட்சியை கைப்பற்றி ஆளுகிறேன் என்று சொல்லி, இதுவரை யாருமே செய்திடாத அளவு
லஞ்ச,லாவண்யங்கள் மூலமாக, பல கோடி கோடிகள் சொத்து சேர்த்து அதனால் தண்டனையும் பெற்று பின் அந்த தண்டனையினின்று நீதிமன்றத்தை "கவனிக்க"
வேண்டிய விதத்தில் " கவனித்து " விடுதலை பெற்று மீண்டும் கொள்ளை அடிக்க பதவியில் அமர்ந்தார்.
இதற்கு மத்தியில் அவரது பதவிக்காலம் முடிந்து
மீண்டும் தேர்தல் வந்தபோது, தேர்தலை நடத்தும் கமிஷனை தனது கட்டுப்பாடிற்குள் வைத்துக்கொண்டு அதனதன் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணத்தை
அள்ளி வீசி அநியாய,அக்கிரம வழிகளில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.
அரசன் அன்று கொல்வான்,
தெய்வம் நின்று கொல்லும் !!
என்ற முது மொழிக்கு இணங்க, இந்த நடிகை/ஆட்சித்தலைமை பெண்ணுக்கு ஒருநாள் இரவு திடீரென்று உடல்நிலை படுமோசமாகி
படுத்தபடுக்கை ஆனார். எதனால் இந்த நிலை என்று பார்த்தால், முறைதவறி வெற்றி அடைந்தவர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எதுவும் சொல்ல இயலாது. இப்போது அவர் உடல்நிலை என்ன ? அவரை யாரும் சென்று சந்திக்க முடியாதபடி, இந்த நடிகை
ஒரு தோழியை தன்வசம் வைத்திருந்தார். இப்போது இந்த தோழிதான் கிட்டத்தட்ட ஆளும் அதிகாரத்தைத் தனது கைவசம் வைத்துள்ளதாக கேள்வி.
இந்த நிலையில் அங்கே நான்கு இடங்களுக்கு இடைத்தேர்தல் வந்தது.அதிலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றது அந்த நடிகையின் கட்சி. ஏற்கனவே செய்த முறைகேடு வெற்றிக்கு கிடைத்த பரிசு, இப்போது உடல்நிலை
பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை.
அப்படி என்றால், இப்போது பெற்றுள்ள அதே முறைகேடு வெற்றிக்கு என்ன பரிசு ?
என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு
ஆண்டவன்தான் பரிசு அளிப்பான் அதுவும் வெகு
விரைவில் !! அது யாருமே எதிர்பாராத வகையில் சோகம் மிக நிறைந்ததாகவே இருக்கும் என்று அந்த மாநில ஜோதிட வல்லுனர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள் என்பது நடைபெற்ற வரலாறு.
புயலுக்குப் பிறகு அமைதி !!
அநியாய வெற்றிக்குப் பிறகு ?
இறைவன் பதில் தருவான் -- விரைவில் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
ஞாயிறு, 6 நவம்பர், 2016
ஆரியக்கூத்தாடினாலும் காசு காரியத்தில் கண் வையடா !!
ஆரியக்கூத்தாடினாலும் காசு காரியத்தில் கண் வையடா !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற எனதன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிமை நிறைந்திட்ட காலை
வணக்கங்களை காணிக்கையாக்கிடும் இந்த
வேளையில் நான் ஏறத்தாள 64 ஆண்டுகளுக்குப்
பின்னால், எனது நினைவலைகளைக் கொண்டு
சென்று அதில் பயணிக்கத்தொடங்குகிறேன் என்
அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
தமிழ் இனத்தலைவர்முத்தமிழ்அறிஞர்கலைஞர்
அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிவெளிவந்த
வெற்றிச் சித்திரமாம் " பராசக்தி " திரைப்படம்
வெளிவந்த 1952 ம்ஆண்டு அது. அனைவருக்கும்
தெரியும் அதில்தான் கணேசன் என்ற பெயருடன்
இருந்த ஒரு புதுமுகத்தை, (கலைஞர் அவர்கள்
செய்த விடாமுயற்சியால்,) நடிக்க வைத்து அதன்
பின்அவர்சிவாஜிகணேசனாகமாறிதிரையுலகில்
பல்வறு சாதனைகளை செய்து இமயத்தின் உச்சிக்கு சென்றார்என்பது வரலாறு.( ஆனால் அதன் பின்பு வளர்த்த கலைஞர் அவர்களுக்கும் திமுக இயக்கத்துக்கும் துரோகம் செய்து தனிக்கட்சி தொடங்கி அதனை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து வீணாகிப்போனது வேற கதை.இதுபோல ஆயிரமாயிரம் துரோகங்களை சந்தித்து, அதனில்வென்று தியாகங்களால்திமுக
என்ற பேரியக்கத்தை ஆலமரம்போல வளர்த்த பெருமை,புகழ், கலைஞர் அவர்களைத்தவிர வேறு யாருக்கு வரும்.)
அந்த பராசக்தி படத்தில் ஒரு பாடல் :- (பாடலைப்பாடியவர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரிய மாமா, மறைந்த இசைச்சித்தர் என்று அழைக்கப்பட்ட வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் சிதம்பரம் S.ஜெயராமன், மேலும் பாடலுக்கு இசை அமைப்பு மறைந்த இசை மேதை R.சுதர்சனம். படத்தை இயக்கியவர்கள் இரட்டையர்கள் கிருஷ்ணன் & பஞ்சு ஆகும்)
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசுமுன் செல்லாதடி !!-குதம்பாய் !!காசுமுன் செல்லாதடி !!
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் !!காசுக்குப் பின்னாலே !!-குதம்பாய் !!காசுக்குப் பின்னாலே !!
காட்சியான பணம் கைவிட்டுப் போனபின் சாட்சி கோர்ட் ஏறாதடி !!-குதம்பாய் !!சாட்சி கோர்ட் ஏறாதடி !!
பை பையாய் பொன் கொண்டோர் !! பொய் பொய்யாய் சொன்னாலும் !!மெய் மெய்யாய் போகுமடி!!-குதம்பாய் !! மெய் மெய்யாய் போகுமடி !!
நல்லவரானாலும் ( காசுபணம்) இல்லாதவரை !!நாடு மதிக்காது !!-குதம்பாய் !! நாடு மதிக்காது !!
கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் !!கொண்டாடுதல் !! வெள்ளிப்பணமடியே !!குதம்பாய் !!-வெள்ளிப்பணமடியே !!
ஆரியக்கூத்தாடினாலும்தாண்டவக்கோனேகாசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே !!
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே !!- காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே !!
முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே -சில
முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே !!
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே !!- பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே !!-பணப்
பெட்டிமேலேகண் வையடாதாண்டவக்கோனே !!
ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனேகாசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே !!
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள "காஷ்மோரா-டெல்டா " என்ற கட்டுரையைப் படித்தபோது எனது சிந்தையில் கடந்தகாலங்களில் நான் மிகவும் இரசித்துக் கேட்ட மேற்குறித்த பாடல் நினைவின்பால்
வந்தது நேயர்களே. அதனை உங்களோடும் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். அதனால்தான் இந்தக்கட்டுரை உருவானது.
நாம்நமது நினைவுடன், செயல்பாடோடு
இருக்கும்வரை மட்டுமே, நாம் தேடிய திரவியங்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்கும். எப்போது நாம் நமது நினைவினை இழந்து நோய் வாய்ப்பட்டு, " கோமா "நிலைக்குச் சென்றுவிடுகிறோமோ, அப்போது நம்மைச்
சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே, "அகப்பட்டதை சுருட்டுங்கடா, ஆண்டியப்பா ", என்ற முதுமொழிக்கு இணங்க நகை,ரொக்கம், தஸ்தாவேஜுகள் அனைத்துமே களவாடப்பட்டு, யாருக்குப்போய் சென்றடைய வேண்டும்
என்று விதி இருக்கிறதோ, அவர்களிடம் சென்றடைந்துவிடும். நம்மால், இதனைத்தடுத்து நிறுத்த எதுவுமே செய்திட முடியாது அன்பர்களே. இந்தத் தத்துவத்தை, மறைந்த என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனதன்புத்தந்தை அவர்கள் அடிக்கடி சொல்லுவார். அதைத்தான் நான் இப்போது இங்கே குறிப்பிட்டேனே தவிர, வேறு யாரையும் எவரையும் மனதில் எண்ணி இதனை எழுதிடவில்லை எனதன்புத்தமிழ் நெஞ்சங்களே.
எல்லாம் ஆண்டவன் செயல். அவன் விதித்த விதியை யாரும் மீறி செயல்பட முடியவே முடியாது அன்பர்களே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. TR.பாலு.
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது !! விசித்திரமாகியது தமிழ்நாட்டு அரசியல் களம் !!
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை
வணக்கங்கள்.
நான் இங்கே கட்டுரைக்கு கொடுத்துள்ள
தலைப்பு :-
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது !!
விசித்திரமாகியது தமிழ்நாட்டு அரசியல் களம் !!
பொதுவாக மேலே குறிப்பிட்டுள்ள பழமொழி
ஒரு விஷயத்தை மூடி,மூடி,மறைத்து வைத்துள்ள போது அதன் உண்மை நிலைமை வெளியே தெரியவரும்போது,பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை தொடர் ஆகும்.
இங்கே நம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில்,
என்ன நடந்துவந்தது, இதுவரையில் என்று
கேட்டால், முதல்வர் ஜெயலலிதா அவர்களால்
என்னென்ன திட்டங்கள், புறக்கணிக்கப்பட்டு
வந்ததோ, அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து மைய
அரசாங்கத்தை எதிர்த்து, ஆட்சி புரிந்து வந்தாரோ,அவைகள், ஒவ்வொன்றாக, தற்போது பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் அவர்கள் தலைமையில்உள்ள அமைச்சரவை, ஏற்றுக்கொண்டு அவைகளை அமல்படுத்தி செயல் படுத்திவரும் அவல நிலைமையை
பார்க்கின்றபோது எனக்கு மேலேகுறிப்பிட்டுள்ள
அந்த பழமொழி நினைவுக்கு வருவதை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்பியே இந்தக் கட்டுரை இங்கே பதிவு செய்யப்படுகிறது அன்பர்களே.
1) " உதய் " மின் திட்டம்.(இதைஅமல்படுத்தினால்
மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் மாநிலத்தின்
மின்வாரியம் வந்து விடும்,மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மைய அரசு இடும் கட்டளைக்கு அடிபணிந்து மின்கட்டணத்தை உயர்த்த வேண்டி வரும் என்ற காரணத்தால், முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதை ஏற்க மறுத்து இதுகாறும் தமிழக மக்களைக்
காப்பாற்றி வந்துள்ளார்.
2) " நீட் " என்று சொல்லப்படும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு அமல் செய்தது. ( இத்திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏற்க மறுத்து அதனை
எதிர்த்து நிலைப்பாடு ஒன்றினை எடுத்து வந்துள்ளார்.என்ன காரணம் என்றால், இது அமல் படுத்தப்பட்டால்,கிராமங்களில் உள்ள, ஏழை,எளிய மாணவர்கள் இந்த மருத்துவப் படிப்பு படிக்கும் ஆசை மண்ணோடு மண்ணாக
ஆகிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக )
3) உணவு பாதுகாப்பு திட்டம். (இதை தமிழகத்தில்
அமல் படுத்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறுத்ததற்கு ஒரே காரணம், இதை ஏற்றுக்கொண்டால், ஏழை,எளிய மக்களுக்கு வழங்குகின்ற அனைத்துவிதமான இலவச அரிசி
நிறுத்தப்படும் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும் இது தனதுவாக்குவங்கியை பாதிப்பு அடையச் செய்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்த்து வந்தார்.)
ஆனால், தற்போது முதல்வர் அவர்கள் அப்போலோ மருத்துவ மனையில், உடல்நலமின்றி இருக்கும் நிலையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள
முடிவு எடுத்த மைய அரசாங்கம், இங்குள்ள நிதி
அமைச்சர் உட்பட, அனைவரையும் அவர்கள் செய்துள்ள சட்டத்திற்குப் புறம்பான காரணங்களால் ஈட்டியுள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பயமுறுத்தி
அவர்கள் ஒவ்வொன்றாக ஜெயலலிதா அவர்கள் ஏற்க மறுத்த திட்டங்களை அமல் படுத்தி வருகிறார்கள்.
இவைகளைப்பார்க்கின்ற போது, அந்தக்காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கதை,திரைக்கதை,வசனம் எழுதி புரட்சி நடிகர்,பானுமதி நடித்து வெளிவந்த "மலைக்கள்ளன் " திரைப்படத்தில்
வருகின்ற பாடல்தான் அன்பர்களே எனது நினைவின் பால் வருகின்றது.
" இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே "
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. TR.பாலு.
ஞாயிறு, 2 அக்டோபர், 2016
புருசன் அடிச்சது தப்பு இல்லையாம் !! நாத்தனாக்காரி "கிளுக்" னு சிரிச்சதிலே கோபம் வந்ததாம் !!
புருசன்அடிச்சது தப்பு இல்லையாம் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் காலை வணக்கம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
இன்றையதினம் நான் இங்கே " நெஞ்சு
பொறுக்குத்தில்லையே " எனும் வலை
பதிவில் எழுதிட நினைப்பது என்ன என
கேட்டால், நேற்றையதினம் ஏதோ ஒரு
குருட்டு அதிர்ஷ்டத்துலே நாகர்கோவில்
பாராளமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று
அதனால், மத்தியில் உள்ள அமைச்சரவையில்,
தமிழகத்துக்கு இடம்தர வேண்டுமே என்ற
கட்டாயத்தினால், (சற்றும் தகுதி இல்லாத இவருக்கு) ஒரு இணை அமைச்சர் பதவி பெற்ற திரு. பொன்.இராதாகிருஷ்ணன்அவர்கள், காந்தி ஜெயந்தி விழாவினை ஒட்டி கன்னியாகுமரியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தனது திருவாய் மலர்ந்து ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தபோது என் தந்தை அடிக்கடி சொன்ன ஒரு பழமொழிதான் அன்பர்களே இங்கே கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது.
புருசன்அடிச்சது தப்பு இல்லையாம் !!
நாத்தனாக்காரி "கிளுக்" னு சிரிச்சதிலே !!கோபம் வந்ததாம் !!
அதாவது தமிழக முதலமைச்சர்அம்மையார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்
சிகிச்சை பெற்று வரும் நிலையில், கழகத்
தலைவர் கலைஞர் அவர்கள் சில கேள்விகள்
எழுப்பி உள்ளதை, மறைமுகமாக தாக்கும்
விதமாக அவர் பேசியது இதுதான் :-
முதல்வர் உடல்நிலை பற்றித்தான் அப்போலோ
மருத்துவ மனையிலிருந்து அறிக்கைகள்
வருகிறதே. அதை விடவும் வேற என்ன வேண்டும் ? இது சம்பந்தமாக எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்புவதை நான்வன்மையாக கண்டிக்கிறேன்.எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் (இங்கே மறைமுகமாக தி.மு.க.வை அவர் குறிப்பிடுகிறார்) அந்தக் கேள்விகளைக்
கேட்கும் தலைவர்கள் (கலைஞரை) தங்களது உடல்நிலை பற்றிய அறிக்கைகளைவெளியிட தயாரா ?
என்று பேசியுள்ளார். மாண்புமிகு அம்மையார்
அவர்கள் உண்மையிலேயே உடல்நலமின்றி
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளாரா ? அல்லது எதிர்வர இருக்கின்ற
உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு பயந்து மருத்துவ
மனையில் அடைக்கலமாகி இருக்கிறாரா ?
என்ற கேள்விக்கே இன்னும் விடைகிடைத்திடா
நிலையில், அவர் உடல்நிலை குறித்து அரசு
தரப்பில் இருந்து எந்தவிதமான அறிக்கைகளும்
வெளியிடாதது தப்பு இல்லையாம் !! ஆனால்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கேள்வி
கேட்டது தவறு என்று சொல்லுவதா ?
இவர் அருகில் துரோகி சாத்தூர் கோமாளி வேறு
நின்று கொண்டிருந்தார். ஒரு வேளை அவர்
மூலம் பெரும் தொகை இவருக்கு பெறப்பட்டு
உள்ளதோ என்று பொதுமக்கள் பேசிக்கொள்வது
என் காதுகளில் விழத்தான் செய்கிறது.
எல்லாம் அவன் செயல்.
இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றக்
காத்திருக்கிறார்கள் என்பதற்கு காலதேவன்
வெகுவிரைவில் பதில் சொல்லிடக் காத்து
இருக்கிறான் என்று சொல்லி கட்டுரையை
இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
செவ்வாய், 20 செப்டம்பர், 2016
காணொலிக்காட்சி என்பது முறையா ? நியாயமா ?( உள்ளூரில் இருந்துகொண்டே)
காணொலிக்காட்சி என்பது முறையா ? நியாயமா ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இன்று ( 21-09-2016) காலை மணி 11.30 க்கு
சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்க
சேவை எண்:-2. (கோயம்பேடு முதல் சென்னை
விமான நிலையம் வரை உள்ள வழித்தடம்)
துவக்க விழா நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொண்டு சிறப்பிக்க டெல்லியில்
இருந்து மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
வெங்கையா நாயுடு அவர்கள் வருகை புரிந்து
இருக்கிறார்.
இந்த மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க இருக்கும் தமிழக முதலமைச்சரோ, சென்னையில் இருந்துகொண்டே காணொலிக்- ---காட்சி மூலம் கோட்டையில் இருந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மத்திய அமைச்சர் டெல்லியில் இருந்து
இங்கே சென்னை வந்து கலந்துகொள்ளும் அதே
வேளையில், இங்கேயே இருந்துகொண்டு
காணொலிக்காட்சியின் மூலம் துவக்கி வைப்பது என்பது முறையா ? நியாயமா ? என்பதை அவருக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த பொதுமக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)